6,178 எம்.இ., இடங்கள் காலி; அண்ணா பல்கலை தகவல்:
எம்.இ., - எம்.டெக்., சேர்க்கையில், கடைசியாக, 11,553 இடங்கள் நிரம்பின; 6,178 இடங்கள், காலியாக உள்ளன. அண்ணா பல்கலையில் மட்டும் 415 இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகள் வழங்கிய இடங்கள் என, 17,731 இடங்களை நிரப்ப, கடந்த மாதம், அண்ணா பல்கலையில், கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வு முடிவிற்குப் பின், தற்போது, 6,178 இடங்கள், காலியாக இருப்பதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
கலந்தாய்வில், அண்ணா பல்கலையில், 3,156; அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் கல்லூரிகளில், 722; தனியார் கல்லூரிகளில், 7,675 இடங்கள் மட்டுமே
நிரம்பின. வழக்கமாக, அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல்
கல்லூரி, குரோம்பேட்டை, எம்.ஐ.டி., கல்லூரி போன்றவற்றில் படிக்க,
மாணவர்கள், தீவிர ஆர்வம் காட்டுவர்.
ஆனால், எம்.இ., - எம்.டெக்., ஆகிய முதுகலை படிப்புகளில், அண்ணா பல்கலை
கல்லூரிகளிலேயே, முழுமையாக இடங்கள் நிரம்பவில்லை. 415 இடங்கள், இன்னும்
காலியாக இருக்கின்றன. அதிகபட்சமாக, எம்.பி.சி., பிரிவில், 147; பி.சி.,
பிரிவில், 86; எஸ்.சி., பிரிவில், 94 இடங்கள், காலியாக இருக்கின்றன.
தனியார் கல்லூரிகள் வழங்கிய இடங்களில், 5,744 இடங்கள், கடைசிவரை
நிரம்பவில்லை.