குரூப்2 தேர்வு நாள் மாற்றம் இல்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்:
குரூப்2 தேர்வு தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்தபடி 01.12.2013 அன்றே
நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேவாணையம்
அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்
கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
தேர்வு – 2 (தொகுதி-2) ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான அறிவிக்கையினை (எண்
14/2013) வெளியிட்டு அதற்கான முதனிலை எழுத்துத் தேர்வினை 01.12.2013 அன்று
நடத்த திட்டமிட்டிருந்தது.ஆனால் அதே நாளில் (01.12.2013) வேறு சில தேர்வு
வாரியம் / ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளும் நடைபெற இருந்ததை
சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-2
தேர்வினை வேறு ஒரு நாளில் நடத்துமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை
விடுத்திருந்தனர்.
மேற்படி கோரிக்கைகளை பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி-2 தேர்வுக்கு
சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மேல் விண்ணப்பித்திருப்பதாலும்,
இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாலும், அடுத்தடுத்து வரும் வார
இறுதி நாட்களில் மற்ற தேர்வு வாரியம்/ஆணையங்களின் போட்டித் தேர்வுகள்,
துறைத் தேர்வுகள் இருப்பதனாலும், மேற்படி தேர்வினை விரைந்து முடித்து
தேர்வு முடிவுகளை அறிவிக்கும் பொருட்டு இத்தேர்வினை தேர்வாணையம் ஏற்கனவே
அறிவித்தபடி 01.12.2013 அன்றே நடத்த முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...