2014ம் ஆண்டு ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு - மே 25ல் நடத்தப்படும்:
ஐ.ஐ.டி.,களின் கூட்டு சேர்க்கை வாரியம், 2014ம் ஆண்டு ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே 25ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.கடந்தாண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே அத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மேலும், இத்தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறாது என்று ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, அடுத்தாண்டு நடைபெறும் தேர்வு பேப்பர் - பென்சில் தேர்வாக நடைபெறும்.
இத்தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாளுக்கான தேர்வு காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாளுக்கான தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.
கேள்வித்தாள் objective முறையில் இருக்கும் மற்றும் இதன்மூலம் ஒரு மாணவரின் புரிந்துகொள்ளும் திறன், பகுப்பாய்வு மற்றும் காரணகாரிய ஆராய்வு திறன் போன்றவை சோதிக்கப்படும்.
இந்தியாவின் IIT -கள் மற்றும் ISM - தன்பாத் ஆகியவற்றிலுள்ள இளநிலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, 7 பிராந்திய IIT -களால் நடத்தப்படுகிறது இந்த JEE தேர்வு. JEE மெயின் தேர்வின் முதல் தாளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள், JEE Advanced தேர்வுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
2014ம் ஆண்டிற்கான JEE Main தேர்வு, ஜே.இ.இ., உயர்மட்ட வாரியத்தின் சார்பாக, அடுத்தாண்டு ஏப்ரல் 6ம் தேதி CBSE அமைப்பால் நடத்தப்படுகிறது. இத்தேர்வு, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரண்டு முறைகளில் நடத்தப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...