இந்திய உயர்கல்வி நிலை கவலையளிக்கிறது: பிரணாப் முகர்ஜி:
இந்தியாவின் உயர்கல்வி பாடத்திட்டம், இனிமேலும் வழக்கமான ஒரு
சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. மாறாக, மாணவர்களிடையே ஆராய்ச்சியையும்,
புத்தாக்க முயற்சியையும் தூண்டுவதாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி கூறியுள்ளார்.
மேகாலயா மாநிலத்தில் ஒரு பல்கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய
பிரணாப், இதுதொடர்பாக மேலும் கூறியதாவது: நாட்டின் பல்கலைகள், தங்களின்
பாடத்திட்டங்களின் மூலமாக, ஆராய்ச்சி மேம்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.
பல்கலைகளில் புத்தாக்க முயற்சிகளைத் தொடங்க வேண்டிய உடனடித் தேவை
எழுந்துள்ளது.
பிரச்சினைகள், தீர்க்கப்படும் சாத்தியங்களுடன் அணுகப்பட வேண்டும். கல்வி
மேலாண்மையின் பல்வேறு அம்சங்களில், போதுமான நெகிழ்வுத் தன்மையை
அனுமதிப்பதன் மூலமாக அறிவுத்திறன் கலலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும்.
உயர்கல்விக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் இந்திய அரசின் முயற்சிகள் மூலமாக,
சில நல்ல விளைவுகள் ஏற்பட்டுள்ள போதிலும், போதுமான தரமின்மை காரணமாக,
மிகச்சில இந்திய உயர்கல்வி நிறுவனங்களே, உலகளாவிய தரத்தில் உயர்ந்துள்ளன.
இந்தியாவின் எந்தவொரு பல்கலையும், உலகின் சிறந்த பல்கலைகளுள் ஒன்றாக
இலலை. உலக தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுக்கப்படும் அம்சங்களை நமது
உயர்கல்வி நிறுவனங்கள் அதிகமாகவே பெற்றிருந்தபோதிலும், அவற்றை சரியான
முறையில் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்காத காரணத்தினால், தகுதியான
நிலையை நம்மால் அடைய முடியவில்லை.
நம்மிடம் திறமையான ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தபோதிலும்,
அவர்களிடையே போதுமான ஒருங்கிணைப்பு இருப்பதில்லை. சரியான நேரத்தில் சரியான
நடவடிக்கையை நாம் மேற்கொண்டால்தான், அதற்கான சிறந்த பிரதிபலனை நாம்
அடைவோம்.
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் படித்த பல விஞ்ஞானிகள், அறிவியலுக்கான
நோபல் பரிசைப் பெற்றிருந்த போதிலும், அமெரிக்க பல்கலைகளில்
பணியாற்றும்போதுதான் அவர்களுக்கு அந்தப் பரிசுகள் கிடைத்தன. இதனால்,
நமக்கான முழு பெருமையும் கிடைக்காமல் போனது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...