அரசு பள்ளி மாணவர்களின் அச்சத்தை போக்க "மொபைல் கவுன்சலிங் வேன்"
நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக,"மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம், தேர்வு அச்சம்
நீக்க, மகிழ்ச்சியுடன் கல்வி கற்பிக்க, படைப்புத் திறனை மேம்படுத்த,
நடமாடும் உளவியல் பயிற்சி மையம் துவங்கப்பட்டது.
அதற்காக, பத்து நடமாடும் உளவியல் பயிற்சி மைய வேன்கள்
வாங்கப்பட்டுள்ளது. அதில், "டிவி", செய்முறைப் பயிற்சி, ஆலோசனை
"சிடி"க்கள், உளவியல் ஆலோசகர், உதவியாளர் உள்ளிட்ட வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல், ஈரோடு கல்வி மாவட்டங்களை சேர்ந்த
மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் சென்டர்" என்ற பெயரில், நேற்று,
நாமக்கல்லில் துவக்க நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக் கல்வித்துறை
(நாட்டுநலப்பணித் திட்டம்) இணை இயக்குனர் உஷாராணி, மாவட்ட கலெக்டர்
தட்சிணாமூர்த்தி, சி.இ.ஓ., குமார் உள்ளிட்ட அதிகாரிகள் துவக்கி வைத்தனர்
"மூன்று மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட அரசுப்
பள்ளிகளில் உள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ,
மாணவியருக்கு பயிற்சிகள் வழங்கப்படும்" என, கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...