நொந்து நூலாகும் பகுதிநேர நூலகர்கள் - எப்போது கவனிக்கும் அரசு?
வேலை நாட்களுக்கு மட்டும், தினமும் 20 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதால், பகுதிநேர நூலகர்கள் மனம் நொந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
நூலகத்துறையை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. இத்துறையில், 17 மாவட்ட
நூலக அலுவலர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல் 35 முதல்நிலை
ஆய்வாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இப்பணியிடங்களும் பல ஆண்டுகளாக
நிரப்பப்படவில்லை.
இதேபோல் நூலகர் பணியிடங்கள், பகுதி நேர நூலகர் பணியிடங்கள் என காலிப்
பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. 15 ஆண்டுகளாக பணிபுரியும்
பகுதிநேர ஊழியர்களுக்கு, எந்த பணிப்பலன்களும் வழங்கப்படவில்லை. 1800
பகுதிநேர நூலகங்களில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு
இதுவரை தினமும் 20 ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.
அதுவும் வேலை நாட்களில் மட்டும்தான் சம்பளம். மாதம் 10 நாட்கள் வரை
விடுமுறை வந்து விடுவதால், இவர்களின் மாதச்சம்பளமே 400 ரூபாய்தான். அதுவும்
முறையாக வழங்கப்படுவதில்லை. என்றாவது ஒருநாள் நமக்கும், அரசு ஊழியர்களை
போல் சலுகைகளும், சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் வாழ்க்கையை தொலைத்து
விட்டு தவித்துக் கொண்டுள்ளனர்.