இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு பயிற்சி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சான்றிதழுடன் கூடிய தொழில் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் மேற்பார்வையில் தமிழக அரசின் உதவியுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் இந்தியன் வங்கி சார்பாக இலவச பயிற்சி நிறுவனம் கடந்தாண்டு துவங்கப்பட்டது. தற்போது வரை 832பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 30 பெண்கள் அப்பேரல் டிசைனிங் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு டிசம்பர் வரை எம்ப்ராய்டரி பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, மொபைல்ஃபோன் பழுதுபார்த்தல், காளன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காகித கப் மற்றும் கவர் தயாரித்தல், கிராமப்புற தொழில் முனைவோர் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சி அனுபவமும், திமையும் வாய்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் மதிய உணவு பயிற்சி மையத்தால் இலவசமாக வழங்கப்படும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில் துவங்க வழிகாட்டுதல் ஆலோசனை போன்றவைகள் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோரின் பெயர், முகவரி, விருப்பமுள்ள பயிற்சி மற்றும் மொபைல் ஃபோன் எண் ஆகியவை நவம்பர் 30ம் தேதிக்குள் இயக்குனர், இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி-5 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களை பெற 94422 74912, 04342-230511 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.