டி.டி. மருத்துவக் கல்லூரியில் படித்த 150 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு:
டி.டி.
மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டு சேர்ந்த 150 மாணவ-மாணவிகளை அரசு
கல்லூரிகளில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வுதிருவள்ளூர்
டி.டி. மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பிறகு முதல் குரூப் மாணவ-மாணவிகளை
சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது.
அதன் பின்னர் அனுமதி
வழங்கப்படவில்லை. இருப்பினும் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அந்த
மாணவர்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.இந்த
நிலையில் முதலில் சேர்ந்த 150 மாணவ-மாணவிகளை அரசு மருத்துவக்கல்லூரியில்
சேர்க்க தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு இந்திய மருத்துவ
கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த 150 மாணவர்களுக்கும்
இன்று காலை 11 மணிக்கு கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு
மருத்துவக்கல்லூரி கலை அரங்கில் நடைபெறுகிறது.டிமாண்ட் டிராப்ட் மாணவர்கள்
வரும்போது உரிய சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும். மாணவர் அல்லது மாணவியுடன்
பெற்றோர் ஒருவர் கலந்தாய்வின்போது அனுமதிக்கப்படுவார். மேலும் ரூ.500-க்கு
டிமாண்ட் டிராப்ட் சென்னையில் மாற்றத்தக்க வகையில் செயலாளர்,
தேர்வுக்குழு, சென்னை -10 என்ற முகவரிக்கு எடுத்து வர வேண்டும்.
அபிடவிட்டும் கொண்டு வரவேண்டும்.கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு
அவர்களின் மதிப்பெண் மற்றும் சாதி அடிப்படையில் அரசு
மருத்துவக்கல்லூரிகளில் படிக்க இடம் ஒதுக்கப்படுகிறது. மாணவர்கள் புதிதாக
கருதப்படமாட்டார்கள். அவர்கள் இப்போது எந்த வருடத்தில் இருக்கிறார்களோ
அப்படியே அரசு கல்லூரியில் படிக்கலாம்.