அறிவியல் கண்காட்சியில் மாநிலத்தில் முதலிடம் அமைச்சர் பாராட்டு :
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களில் ஒன்றாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வெளிக் கொணரும் வகையில் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில்
08.11.2013 அன்று நடைபெற்ற அறிவியல்கண்காட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி, தெங்கியாநத்தம் 9 ஆம் வகுப்பு மாணவன் ச.சிவக்குமாரின் சிலீப்அலர்ட் & கேஸ் லீக்கேஜ் அலர்ட் என்ற அறிவியல் படைப்பில் முதலிடம்பெற்றார்.13.11.2013 அன்று விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ,மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் பங்குபெற தகுதிபெற்றார்.மேலும் 05.12.2013 முதல் 07.12.2013 வரை காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம்
ஜெயகோபால் கரோடியா மேல்நிலை பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும்
இம் மாணவனின் படைப்பு முதலிடம் பெற்றது . இம்மாணவனின் திறமையை மாண்புமிகு தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு.ப.மோகன் B.A அவர்கள் பாராட்டி சால்வை அணிவித்தார்.இந்நிகழ்வில் உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.கா.மணி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...