தமிழகத்தில் நாளை துவங்கும் சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கான உடற்தகுதி
தேர்வில், 46,865 பேர் பங்கேற்கின்றனர். இவர்களில் 10,500 பேர் மட்டுமே
தேர்வு செய்யப்பட உள்ளதால் தேர்வில் ஆட்குறைப்பு அதிகமாக இருக்கும் என
தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படையில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும் என
அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு மாநிலம் முழுவதும் 10,500 பேர் தேர்வு
செய்யப்படுவர். மாத மதிப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும், என
தெரிவிக்கப்பட்டது.
தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு போலீஸ் வாகனங்களை ஓட்டுதல், அலுவலக
கடிதங்களை பட்டுவாடா செய்தல், கம்ப்யூட்டரில் விவரங்களை பதிவு செய்தல்,
போலீஸ் குடியிருப்புகளை பராமரித்தல், விபத்தில் உயிர்ப்பலிகள் ஏற்படா
வண்ணம் தடுத்தல் உட்பட பல பணிகள் ஒதுக்கப்படும். இதில்
விண்ணப்பித்தவர்களுக்கு, கடந்த நவ.,10 ல் எழுத்து தேர்வு நடந்தது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு, நாளை
துவங்குகிறது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 46,865 பேர்
பங்கேற்கின்றனர். இவர்களில், 10,500 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட
உள்ளதால், 5 பேரில் ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால்,
தேர்வில் ஆட்குறைப்புக்கு கடுமையான விதிகள் பின்பற்றப்பட உள்ளன.
மார்பளவு, உயரம், வயது, சான்றிதழ், 1,500, 400, 100 மீட்டர் ஓட்டம்,
நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உட்பட பலவித தேர்வுகள் நடத்தப்பட்டு,
அனைத்தும் கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...