இந்தியாவில் வழங்கப்படும் வழக்கமான கல்விமுறை, பணி வாய்ப்புக்கான
திறன்களை மாணவர்களுக்கு வழங்காதபடியால், குறைந்தபட்சம், இந்தாண்டின்
பாதியளவு பட்டதாரிகள், எந்தப் பணியையும் பெற முடியாமல், வேலையற்று
இருக்கிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
2013ம் ஆண்டின் முக்கியமான பணி வாய்ப்பு அம்சத்தின் மீது ஆய்வு
மேற்கொண்டதன்படி, இந்த ஆண்டில் வெளிவந்த பட்டதாரிகளில், குறைந்தபட்சம் 47%
பேர், எந்த துறையிலும் பணி வாய்ப்புகளைப் பெற முடியாதவர்களாக உள்ளனர்.
அவர்களின் ஆங்கில அறிவு மற்றும் இதர முக்கிய பணித் திறன்களை வைத்து
அவர்களால் எந்த பணியையும் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதிகளவில் மூன்று வருட பட்டப் படிப்புகளை
மேற்கொள்கின்றனர். ஆனால் பணி வாய்ப்புகள் என்று வரும்போது, அவர்கள்
ஆண்களுக்கு சமமாக அல்லது அவர்களைவிட அதிகளவிலான பணி வாய்ப்புகளைப்
பெறுகிறார்கள். 100 பெண்களுக்கு 109 ஆண்கள் என்ற விகிதத்தில் மூன்று வருட
பட்டப் படிப்புகளை மாணவர்கள் மேற்கொள்கின்றனர்.
ஆங்கில அறிவு பற்றாக்குறை, தேவையான கணினி அறிவின்மை மற்றும் கருத்தாக்க
கற்றலில் உள்ள போதாமை உள்ளிட்டவை, பணி வாய்ப்புகளைப் பெறுவதில் பெரிய தடைக்
கற்களாக உள்ளன. சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் வாழும்
இளைஞர்கள், ஆங்கில அறிவு மற்றும் கணினி அறிவு ஆகியவற்றில் உள்ள
பற்றாக்குறையால் தங்களுக்கான பணிகளைப் பெற சிரமப்படுகிறார்கள்.
பைனான்ஸ் மற்றும் அக்கவுன்டிங் துறைகளைப் பொறுத்தவரை, வெறும் 25%
பட்டதாரிகள் மட்டுமே, நிஜ உலக சிக்கல்களைத் தீர்க்கும் வகையிலான
பிராக்டிகல் அறிவைப் பயன்படுத்தும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். அதேசமயம்,
சராசரியாக 50% பட்டதாரிகள், அதே சிக்கல்களுக்கு, தியரி மற்றும் கருத்தாக்க
தீர்வுகளை மட்டுமே வழங்கும் திறன் பெற்றிருக்கிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
அக்கவுன்டிங் துறையில் பணி வாய்ப்பு பெற்றுள்ள பட்டதாரிகளில் 41% பேர்,
தரநிலை வரிசையில், 30ம் நிலைக்கு மேலே உள்ள கல்லூரிகளிலிருந்து வந்தவர்கள்.
அதேசமயம், ஐ.டி., தொடர்பான துறைகளில் இந்த சதவீதம் 36% என்ற நிலையில்
உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...