தொழிலாளர்
வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ.) நடப்பு 2013-14-ஆம் நிதி
ஆண்டிலும் பிராவிடண்ட் ஃபண்டு (பி.எஃப்) சேமிப்புக்கு சென்ற நிதி ஆண்டைப்
போன்று 8.5 சதவீத வட்டியைத்தான்வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த
அமைப்பில் 5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.ஜன.13-ந் தேதி முடிவுதொழிலாளர்
நல அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆஸ்கார் பெர்ணான்டஸ் தலைமையின் கீழ்
செயல்படும் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த வட்டி விகிதம்
தொடர்பாக முடிவு செய்யப்படும்.
இந்த கூட்டம் ஜனவரி 13-ந் தேதி
நடைபெறுகிறது. பி.எஃப். சேமிப்பிற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்குவதால்
ரூ.56.96 கோடி தான் உபரி நிதி கிடைக்கும் என செய்திக் குறிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும்
வட்டி, இ.பி.எஃப்.ஓ. ஈட்டும் வருவாயின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் இந்த அமைப்பிற்கு ரூ.20,796.96 கோடி வருவாய்
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8.5 சதவீத வட்டி வழங்குவதானால்
ரூ.20,740 கோடி செலவினம் ஏற்படும். ஆக, உபரி நிதி குறைவாக உள்ளது.
இ.பி.எஃப். அமைப்பு சந்தாதாரர்களிடமிருந்து திரட்டும் டெபாசிட்டுகளை
முதலீடு செய்து ஆதாயம் ஈட்டுகிறது.பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில்
பி.எஃப். டெபாசிட்டிற்கு 9 சதவீத வட்டி வழங்கப்பட வேண்டும் என்பது
தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த அளவிற்கு வட்டி வழங்கினால்
இ.பி.எஃப்.ஓ. அமைப்பிற்கு வருவாயைக் காட்டிலும் கூடுதலாக ரூ.1,220 கோடி
செலவினம் ஏற்படும். இது சாத்தியப்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த
2010-11-ஆம் நிதி ஆண்டில் பி.எஃப். வட்டி விகிதம் 9.5 சதவீதமாக
உயர்த்தப்பட்டது. அப்போது இ.பி.எஃப்.ஓ. அமைப்பிடம் ரூ.1,761 கோடி உபரி நிதி
இருந்தது. இந்நிலையில், நிதி குறைவாக இருந்ததால் 2011-12-ஆம் நிதி ஆண்டில்
பி.எஃப். டெபாசிட் வட்டி 8.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, சென்ற
2012-13-ஆம் நிதி ஆண்டில் 8.50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. நடப்பு நிதி
ஆண்டிலும் இதே வட்டிதான் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தாமதம்விதிமுறைகளின்படி
ஒரு நிதி ஆண்டிற்கான பி.எஃப். வட்டி விகிதத்தை ஆண்டு தொடங்குவதற்கு
முன்பாகவே அறிவிக்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை
பின்பற்றப்படவில்லை. தாமதமாகத்தான் வட்டி விகிதஙக்ள் அறிவிக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...