பிரிட்டனைச் சேர்ந்த 90 வயது மாணவர் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஆசிரியரான
எரிக் வூப், தனது பள்ளிப் படிப்பை முடித்து 74 ஆண்டுகளுக்குப் பின் 90வது
வயதில் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, எரிக் வூப் கூறியதாவது: "லண்டனைச் சேர்ந்த,
தொழிலாளிக்கு பிறந்த நான் 16வது வயதில் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க
பள்ளிப்படிப்பை விட்டு பணியில் சேர்ந்தேன்; இரண்டாம் உலகப் போர்
துவங்குவதற்கு முன், லண்டனுக்கு குடிபெயர்ந்து கணித ஆசிரியர் பயிற்சி
பெற்றேன். பின், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், 39வது வயதில்
ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.
திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். கணித ஆசிரியராக 20
ஆண்டுகள் பணிபுரிந்தேன். கடந்த 2003ல், எம்.ஏ., பட்டம் பெற்றேன்; 2008ல்
லாங்கெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன்.
பல்கலைக்கழக சூழல் என்னை உற்சாகப்படுத்தியதுடன், தூண்டுகோலாகவும் இருந்தது;
சக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் உதவி கிடைத்தது." இவ்வாறு எரிக் வூப்
கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...