அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறினார்.தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த "கணித உலகம்-2013" என்ற கண்காட்சியை திறந்து வைத்து, முதல்வர் பேசியதாவது:
"புதுச்சேரி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக வந்தால்
புதுச்சேரிக்கு பெருமை கிடைக்கும். இதற்காகத்தான் பிறப்பட்டோர் நலத்துறை
பாட்கோ சார்பில் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்டு,
சென்னையில் பயிற்சி பெற அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை கல்வியை தரமானதாக
அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் எடுக்கும்
மாணவர்கள் தான் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும்.
முன்பு, ஜிப்மர் மருத்துவமனையில் 15 எம்.பி.பி.எஸ். சீட் பெறுவதற்கு தவம்
கிடக்க வேண்டும். தற்போது புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 265
சீட்டுகள் எம்.பி.பி.எஸ். படிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என பெற்றோர் பலர்
நினைக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்களைச்
சேர்க்க வேண்டும்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...