ஒன்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். புரபஷனல் படிப்பை பொறுத்தவரை, ஒரே
கல்வி நிறுவனம் வழங்கும் ரெகுலர் படிப்பு மற்றும் தொலைநிலைப் படிப்பு
ஆகியவற்றுக்கு இடைய எந்த பாடத்திட்ட வேறுபாடும் இருப்பதில்லை.
அதேசமயம், அது முறையான
அங்கீகாரத்தையும் பெற்றிருக்க வேண்டும். புரபஷனல் படிப்புகளைப் பொறுத்தவரை,
பிராக்டிகல் பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே, அத்தகையப்
படிப்புகளை வழங்கும் நல்ல கல்வி நிறுவனங்கள், தங்களின் மாணவர்கள்
அதிகளவிலான பிராக்டிகல் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதை உறுதி
செய்கின்றன.
நல்ல கல்வி நிறுவனங்கள், PCP வகுப்புகள் தொடர்பான நடைமுறைகளைக்
கொண்டிருக்கும். PCP வகுப்புகளில் கலந்துகொள்ளும் தொலைநிலைக் கல்வி
மாணவர்கள், தங்களின் இறுதித் தேர்வை எழுதும் முன்பாக, பிராக்டிகல் தேர்வில்
கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொலைநிலையில் புரபஷனல் மேல் படிப்பை மேற்கொள்ளும், பணிபுரியும் நபர்கள்,
தங்களின் புராஜெக்ட் பணியை தயாரிக்கும்போது, தங்களின் நடைமுறை பணி
அனுபவத்தையே நன்றாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொழில்துறை நிபுணர்களின் பிராக்டிகல் அறிவுத்திறன் வெளிப்பாடு மற்றும்
மாணவர்கள் பணி அனுபவம் ஆகியவை இணைந்து, ஒருவர் தான் படிக்கும் விஷயங்களை
சோதித்தறிய பயன்படுகின்றன மற்றும் சிறப்பான தியரி கட்டமைப்பிற்கு
துணைபுரிகின்றன.
இன்றைய நாட்களில், தனியார் - பொது கூட்டிணைப்பு முறையில்,
பல்கலைக்கழகங்கள், கல்வி வழங்குநர் அமைப்புகளிடம் இணைந்து செயல்படுகின்றன.
அந்த அமைப்புகள், Online format மற்றும் ICT - enabled facilities
ஆகியவற்றை பொறுப்பேற்றுக் கொள்கின்றன.
பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டடி சென்டர் ஆகியவற்றுக்கு இடையே ஒரு பாலமாக
கல்வி வழங்குநர் அமைப்புகள் செயல்படுவதால், மாணவர்களுக்கு ஒரு சிறப்பான
அனுபவம் ஏற்படுகிறது. எனவேதான், தொலைநிலைக் கல்வியில் புரபஷனல்
படிப்புகளில் சேரும்போது, மேற்கூறிய tie - up வைத்திருக்கும் கல்வி
நிறுவனங்களில் சேரும் மாணவர்கள், நல்ல பலன்களைப் பெறுகிறார்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...