ஜே.இ.இ., தேர்வு அடிப்படையிலும் மாணவர்களை சேர்க்க அனுமதி:
அடுத்த கல்வியாண்டிலிருந்து, JEE நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று தனியார் பல்கலைகளுக்கு, மத்திய பிரதேச தனியார் பல்கலை ஒழுங்குமுறை கமிஷன் அனுமதியளித்துள்ளது.
அதேசமயம் இது கட்டாயமும் அல்ல. தனியார் பல்கலைகள் JEE தேர்வை விரும்பவில்லை என்றால், அவை தங்களுக்கான தனி நுழைவுத் தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து தொடர்புடைய வட்டாரங்கள் கூறியதாவது: இந்த புதிய அனுமதி, தனியார் பல்கலைகள், தங்களின் மாணவர் சேர்க்கை செயல்பாட்டை முறைப்படுத்த உதவும். ஒவ்வொரு பல்கலையும் தனக்கான தனி கட்டமைப்பையும், சேர்க்கை செயல்பாட்டையும் கொண்டிருப்பதால், JEE மதிப்பெண்ணை கட்டாயமாக்காமல், அவைகளின் விருப்பத்திற்கேற்ப செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய பிரதேசத்தில் மட்டும் 11 தனியார் பல்கலைகள் உள்ளன மற்றும் அவற்றில் சுமார் 20,000 மாணவர்கள் பல்வேறான பொறியியல் கல்லூரிகளில் படிக்கிறார்கள்.