மலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக, "லீகல் செல்" அமைக்க- பள்ளி கல்வித்துறை, திட்டம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Wednesday 1 January 2014

மலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக, "லீகல் செல்" அமைக்க- பள்ளி கல்வித்துறை, திட்டம்:

சம்பளம், பதவி உயர்வு, நிலுவை தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசு துறைகள், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காத போது, பாதிக்கப்படும் ஊழியர்கள் கோர்ட்டை அணுகுகின்றனர். இதுபோன்ற வழக்குகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும் பள்ளி கல்வித்துறையில் மிக அதிகம்.

ஒரு கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர் பல லட்சம் என பெரிய துறையாக பள்ளி கல்வித்துறை இருப்பதால் பிரச்னைகளும் அதிகம். தொடக்க கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் என பல துறைகள், பள்ளிகல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.
பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆசிரியரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தொடக்க கல்வித்துறையில் 1,000 வழக்குகளும், பள்ளி கல்வித்துறையில் 4,000 வழக்குகளும், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விவகாரங்களை கையாள்வதே, பள்ளி கல்வித்துறைக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.
அதிகாரிகளில் பலர் தினமும் கோர்ட்டுக்கு செல்வதே, முக்கிய வேலையாக இருக்கிறது. இதனால், அதிகாரிகளை, அலுவலகத்தில் பார்க்க முடியாமல், துறை ஊழியர்கள், திண்டாடுகின்றனர். வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, உயர் அதிகாரிகள் மாதத்திற்கு, 15 முறையாவது ஆய்வு கூட்டங்களை நடத்துகின்றனர். இதற்காக, மாநிலம் முழுவதிலும் இருந்து அதிகாரிகள், முக்கிய ஊழியர்கள், சென்னைக்கு வருகின்றனர். ஆனாலும், வழக்குகள் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், மண்டல வாரியாக, "லீகல் செல்" அமைப்பை ஏற்படுத்தி வழக்குகளை விரைந்து முடிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கென தனி அலுவலர், பணியாளரை நியமனம் செய்ய வேண்டும் எனில், அரசின் அனுமதியை பெற வேண்டும். மேலும், அதிக செலவும் ஏற்படும். இதனால், அரசின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை, ஆலோசித்து வருகிறது.
அதன்படி கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில், சட்டம் படித்தவர் யார், யார் என்ற விவரங்களை சேகரிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பட்டியலை, மாவட்ட வாரியாக விரைவில் பெற்று அவர்களை மாவட்ட தலைநகரங்களுக்கு இடமாற்றம் செய்து வழக்கு விவகாரங்களை கையாளும் பணியை கல்வித்துறை, வழங்க உள்ளது.
மேலும் மாவட்டங்களில் நடக்கும் குறை தீர்ப்பு கூட்டங்களை பெயரளவிற்கு நடத்தாமல், முழு ஈடுபாட்டுடன் நடத்தி முடிந்த அளவிற்கு பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் எனவும் மாவட்ட அதிகாரிகளை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வரும் ஆண்டுகளில், வழக்குகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என, கல்வித்துறை கருதுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலர் சீனிவாசன் கூறியதாவது: முதன்மை கல்வி அலுவலகங்களில், இளநிலை உதவியாளரை வழக்குகளுக்கு பதில் மனுவை தயாரிக்க, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். இளநிலை உதவியாளர் பணி 10ம் வகுப்பு நிலையில் ஆனது. இவர் எப்படி வழக்கை புரிந்து பதில் மனுவை தயாரிக்க முடியும்? இதனால் பல வழக்குகளுக்கு, பதில் மனுவை தாக்கல் செய்யாமல் அமைதியாக இருந்து விடுகின்றனர்.
இது ஒரு கட்டத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கில், கோர்ட் கண்டனத்திற்கு ஆளாக நேரிடுகிறது. அப்போது தான் உயர் அதிகாரிகளுக்கும் விஷயம் தெரிய வருகிறது. கோர்ட்டுகளில் என்ன வழக்கு வருகிறது, எந்த நிலையில் உள்ளது, பதில் மனு எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரங்களை தெரிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வசதியாக, மாவட்ட வாரியாக சட்ட அலுவலரை நியமனம் செய்ய வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
சட்ட அலுவலரை நியமனம் செய்யாவிட்டாலும் சட்டம் தெரிந்த ஆசிரியர், அலுவலரைக் கொண்டு மண்டல வாரியாக, "லீகல் செல்" அமைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H