ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க அரசாணை இருந்தும் நடைமுறைப்படுத்த பள்ளி நிர்வாகங்களுக்குவாய்ப்பளிக்காத ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான செயல்பாடு குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை புகார் மனு அளித்துள்ளது.
அந்தமனுவின் விவரம் வரு மாறு: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய முகவராக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 181 நாள்15.11.2011 வெளியிடப்பட்டது. இவ்வரசாணையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் வழங்கிய வழிகாட்டுதல் இணைக்கப்படுள்ளது. அரசாணை எண் 181 பக்கம் 7 பத்தி 9 ஆசிரியர் தகுதித் தேர்வில் 60சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்று வழங்கப்படும், பள்ளி நிர்வாகங்கள் (அரசு, உள்ளாட்சி,உதவிபெறும், உதவிபெறாத பள்ளிகள்) தங்களின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்ப மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடந்த இரண்டு தேர்வுகளிலும் மதிப்பெண் தளர்வு வழங்கும் பொறுப்பு தரப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்க அனுமதிக்கவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை ஆதரிக்கும் வகையில் மதிப்பெண் தளர்வு வழங்குவதில்லை என்பது அரசின் கொள்கை முடிவு என்ற தவறான தகவலை கூறி வருகிறது.அரசின் கொள்கை முடிவை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் அமைச்சரவைதான். அமைச்சரவை முடிவிற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு தான் அரசாணை வெளியிடப்படுகிறது.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க இயலாது என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை முடிவெடுத்ததாகவோ, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.12.1.2014தேதியிட்ட செய்தி குறிப்பு எண் 018ல் முதலமைச்சர் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையினை விளக்கி உள்ளார். மத்திய அரசின் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கல்லூரி ஆசிரியராக பணியமர்த்தப்பட எஸ்எல்இடி மற்றும் என்இடி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ, அதே போன்று தான் பள்ளி ஆசிரியராக பணியமர்த்தப்பட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் விரிவாக விளக்கமளித்து உள்ளார்.
பல்கலைக்கழக மான்ய குழு நடத்தும் என்இடி தேர்விலும்,தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அளவில் நடத்தும் எஸ்எல்இடி தேர்வுகளிலும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படுகிறது. யுஜிசி- என்இடி மற்றும் எஸ்எல்இடி தேர்வில் பின்பற்றப்படும் மதிப்பெண் தளர்வு முறை:
பொதுப் பிரிவினர் குறைந்த பட்சமாக தாள் 1ல் 40 விழுக்காடு (40 மதிப்பெண்), தாள் 2ல் 40 விழுக்காடு (40 மதிப்பெண்), தாள்3ல் 50 விழுக்காடு (75 மதிப்பெண்) பெற வேண்டும். ஓபிசி (கிரிமிலேயர் இல்லாது) பிரிவினர் தாள் 1ல் 35 விழுக்காடு (35மதிப்பெண்), தாள் 2ல் 35 விழுக்காடு (35 மதிப்பெண்), தாள் 3ல்45 விழுக்காடு (67.5 மதிப்பெண்) பெற வேண்டும். பி.டபிள்யு.டி,எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் தாள் 1ல் 35 விழுக்காடு (35மதிப்பெண்), தாள் 2ல் 35 விழுக்காடு (35 மதிப்பெண்), தாள் 3ல்40 விழுக்காடு (60 மதிப்பெண்) பெறவேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை எண் 181 (பள்ளிக்கல்வித் துறை) நாள்15.11.2011 பக்கம் 7 பத்தி 9 ஏ பள்ளி நிர்வாகங்கள் (அரசு,உள்ளாட்சி, உதவி பெறும், உதவி பெறாத) தங்களின் இட ஒதுக்கீடு கொள்கைப்படி மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகம் என்கிறபோது பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீர் மரபினர் நலப் பள்ளியை நிர்வகிக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என பல அரசு துறைகளும், சென்னை மாநகராட்சி போன்ற உள்ளாட்சிகளும், அரசு உதவிபெறும் மற்றும் அரசு உதவி பெறாத சிறுபான்மையினர் உள்ளிட்ட தனியார் நிர்வாகங்கள் என பல வகையான பள்ளி நிர்வாகங்களுக்கு மதிப்பெண் தளர்வு வழங்க அரசாணையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் தளர்வு வழங்கிட பள்ளி நிர்வாகங்களுக்கு இடமளிக்காமல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் முகவரான ஆசிரியர் தேர்வு வாரியம் தன்னிச்சையாக மதிப்பெண் தளர்வு வழங்க மறுத்துள்ளது. உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ மதிப்பெண் வழங்க கூடாது என உத்தரவிடவில்லை மாறாக அரசின் முடிவை நடைமுறைப்படுத்தவே நீதிமன்றம் வழி செய்துள்ளது. தற்போது அரசின் கொள்கையை முதலமைச்சரே தெளிவுப்படுத்திய பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக்கல்வித் துறைவும் அரசாணைப்படி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்காமல் மறுத்து வருவது சட்டவிரோத நடவடிக்கையாகும்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) நடத்தும் முகவரான மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மதிப்பெண் சான்று வழங்கும்போது, இட ஒதுக்கீட்டு பிரிவினர் 60சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தாலும் பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்கி இருந்தால் அதற்குரிய சான்றுடன அவர்கள் தகுதிச் சான்று கோரி சிபிஎஸ்இ-க்கு விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.சிடிஇடி நடத்த சிபிஎஸ்இ எப்படி முகவரோ அவ்வாறே தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஎன்டிஇடி) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) முகவராவார்.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கி பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்திருந்தால் அத்தகைய ஆதாரங்களுடன் 60 சதவீத்த்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினர் தளர்வின் அடிப்படையில் தகுதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும்.இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்இடி/ எஸ்எல்இடி யால் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் என்இடி- எஸ்எல்இடி போன்றது தான் என்று விளக்கமளித்துள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மத்திய தகுதித் தேர்வில் (சிடிஇடி) மதிப்பெண் தளர்வு வழங்க பள்ளி நிர்வாகங்களை அனுமதித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண் தளர்வு வழங்க அரசாணை இடமளித்துள்ளது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக்கல்வித் துறையும் நடந்து கொள்வது சட்டத்திற்கு புறம்பானது எனவே, ஆதிதிராவிடர் தேசிய ஆணையம் (என்சிஎஸ்சி) உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசாணை எண் 181ன் கீழ் மதிப்பெண் தளர்வு வழங்க செய்யவேண்டும் இவ்வாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது மனுவில் கோரியுள்ளது.இதே போன்று புகார் மனு ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையிடமும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமும் அரசாணை எண் 181ல் வழங்கப்பட்ட மதிப்பெண் தளர்வை நடைமுறைப்படுத்த கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் நிர்வாகி பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க அரசாணை இருந்தும் நடைமுறைப்படுத்த பள்ளி நிர்வாகங்களுக்குவாய்ப்பளிக்காத ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான செயல்பாடு குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை புகார் மனு அளித்துள்ளது.
அந்தமனுவின் விவரம் வரு மாறு: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரிய முகவராக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 181 நாள்15.11.2011 வெளியிடப்பட்டது. இவ்வரசாணையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் வழங்கிய வழிகாட்டுதல் இணைக்கப்படுள்ளது. அரசாணை எண் 181 பக்கம் 7 பத்தி 9 ஆசிரியர் தகுதித் தேர்வில் 60சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்று வழங்கப்படும், பள்ளி நிர்வாகங்கள் (அரசு, உள்ளாட்சி,உதவிபெறும், உதவிபெறாத பள்ளிகள்) தங்களின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏற்ப மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடந்த இரண்டு தேர்வுகளிலும் மதிப்பெண் தளர்வு வழங்கும் பொறுப்பு தரப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்க அனுமதிக்கவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை ஆதரிக்கும் வகையில் மதிப்பெண் தளர்வு வழங்குவதில்லை என்பது அரசின் கொள்கை முடிவு என்ற தவறான தகவலை கூறி வருகிறது.அரசின் கொள்கை முடிவை உருவாக்குவது தமிழ்நாடு அரசின் அமைச்சரவைதான். அமைச்சரவை முடிவிற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு தான் அரசாணை வெளியிடப்படுகிறது.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க இயலாது என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை முடிவெடுத்ததாகவோ, இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.12.1.2014தேதியிட்ட செய்தி குறிப்பு எண் 018ல் முதலமைச்சர் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைமுறையினை விளக்கி உள்ளார். மத்திய அரசின் உத்தரவுப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. கல்லூரி ஆசிரியராக பணியமர்த்தப்பட எஸ்எல்இடி மற்றும் என்இடி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளதோ, அதே போன்று தான் பள்ளி ஆசிரியராக பணியமர்த்தப்பட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் விரிவாக விளக்கமளித்து உள்ளார்.
பல்கலைக்கழக மான்ய குழு நடத்தும் என்இடி தேர்விலும்,தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அளவில் நடத்தும் எஸ்எல்இடி தேர்வுகளிலும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படுகிறது. யுஜிசி- என்இடி மற்றும் எஸ்எல்இடி தேர்வில் பின்பற்றப்படும் மதிப்பெண் தளர்வு முறை:
பொதுப் பிரிவினர் குறைந்த பட்சமாக தாள் 1ல் 40 விழுக்காடு (40 மதிப்பெண்), தாள் 2ல் 40 விழுக்காடு (40 மதிப்பெண்), தாள்3ல் 50 விழுக்காடு (75 மதிப்பெண்) பெற வேண்டும். ஓபிசி (கிரிமிலேயர் இல்லாது) பிரிவினர் தாள் 1ல் 35 விழுக்காடு (35மதிப்பெண்), தாள் 2ல் 35 விழுக்காடு (35 மதிப்பெண்), தாள் 3ல்45 விழுக்காடு (67.5 மதிப்பெண்) பெற வேண்டும். பி.டபிள்யு.டி,எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் தாள் 1ல் 35 விழுக்காடு (35மதிப்பெண்), தாள் 2ல் 35 விழுக்காடு (35 மதிப்பெண்), தாள் 3ல்40 விழுக்காடு (60 மதிப்பெண்) பெறவேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை எண் 181 (பள்ளிக்கல்வித் துறை) நாள்15.11.2011 பக்கம் 7 பத்தி 9 ஏ பள்ளி நிர்வாகங்கள் (அரசு,உள்ளாட்சி, உதவி பெறும், உதவி பெறாத) தங்களின் இட ஒதுக்கீடு கொள்கைப்படி மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.பள்ளி நிர்வாகம் என்கிறபோது பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும், பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீர் மரபினர் நலப் பள்ளியை நிர்வகிக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என பல அரசு துறைகளும், சென்னை மாநகராட்சி போன்ற உள்ளாட்சிகளும், அரசு உதவிபெறும் மற்றும் அரசு உதவி பெறாத சிறுபான்மையினர் உள்ளிட்ட தனியார் நிர்வாகங்கள் என பல வகையான பள்ளி நிர்வாகங்களுக்கு மதிப்பெண் தளர்வு வழங்க அரசாணையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் தளர்வு வழங்கிட பள்ளி நிர்வாகங்களுக்கு இடமளிக்காமல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் முகவரான ஆசிரியர் தேர்வு வாரியம் தன்னிச்சையாக மதிப்பெண் தளர்வு வழங்க மறுத்துள்ளது. உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ மதிப்பெண் வழங்க கூடாது என உத்தரவிடவில்லை மாறாக அரசின் முடிவை நடைமுறைப்படுத்தவே நீதிமன்றம் வழி செய்துள்ளது. தற்போது அரசின் கொள்கையை முதலமைச்சரே தெளிவுப்படுத்திய பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக்கல்வித் துறைவும் அரசாணைப்படி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்காமல் மறுத்து வருவது சட்டவிரோத நடவடிக்கையாகும்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) நடத்தும் முகவரான மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மதிப்பெண் சான்று வழங்கும்போது, இட ஒதுக்கீட்டு பிரிவினர் 60சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றிருந்தாலும் பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்கி இருந்தால் அதற்குரிய சான்றுடன அவர்கள் தகுதிச் சான்று கோரி சிபிஎஸ்இ-க்கு விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.சிடிஇடி நடத்த சிபிஎஸ்இ எப்படி முகவரோ அவ்வாறே தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஎன்டிஇடி) நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) முகவராவார்.
இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கி பள்ளி நிர்வாகங்கள் முடிவெடுத்திருந்தால் அத்தகைய ஆதாரங்களுடன் 60 சதவீத்த்திற்கும் குறைவாக மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினர் தளர்வின் அடிப்படையில் தகுதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும்.இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு என்இடி/ எஸ்எல்இடி யால் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் என்இடி- எஸ்எல்இடி போன்றது தான் என்று விளக்கமளித்துள்ளார். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மத்திய தகுதித் தேர்வில் (சிடிஇடி) மதிப்பெண் தளர்வு வழங்க பள்ளி நிர்வாகங்களை அனுமதித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மதிப்பெண் தளர்வு வழங்க அரசாணை இடமளித்துள்ளது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியமும் பள்ளிக்கல்வித் துறையும் நடந்து கொள்வது சட்டத்திற்கு புறம்பானது எனவே, ஆதிதிராவிடர் தேசிய ஆணையம் (என்சிஎஸ்சி) உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசாணை எண் 181ன் கீழ் மதிப்பெண் தளர்வு வழங்க செய்யவேண்டும் இவ்வாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது மனுவில் கோரியுள்ளது.இதே போன்று புகார் மனு ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையிடமும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமும் அரசாணை எண் 181ல் வழங்கப்பட்ட மதிப்பெண் தளர்வை நடைமுறைப்படுத்த கோரி மனு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் நிர்வாகி பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.