புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின்
நிர்வாகக்குழு கூட்டம் கவுரவ தலைவர் சேஷாச்சலம் தலைமையில் நடந்தது.
பொதுச்செய லாளர் சம்பந்தம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
7வது
மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வரை இடைக்கால நிவாரணம்
அறிவித்து, அதை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். 7வது
மத்திய ஊதியக்குழுவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 2011 ஜனவரி முதல் 50
சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண் டும். புதிய
பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த
வேண்டும். அனைவருக் கும் 5 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அனைத்து
தினக்கூலி, பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6வது ஊதியக்குழு சம்பள முரண்பாடுகளை
நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்
11ம் தேதி மாலை 4 மணி முதல் 7 மணி வரை தலைமை தபால் நிலையம் எதிரே தர்ணா
போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







