தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார்
கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு
பணிக்கு செல்லும், போலீசாரும், தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான தபால்
ஓட்டு, எஸ்.பி., மூலமாக, வினியோகம் செய்யப்படும். தேர்தலுக்கு, ஒரு
வாரத்திற்கு முன்பாக, போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க,
சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முகாமில், ஓட்டுச் சீட்டு வழங்கப்படும்.
அங்கே ஓட்டுப் பெட்டி
வைக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள், அங்கேயே ஓட்டு போட்டு, பெட்டியில்
போடலாம். அன்று ஓட்டு போட முடியாதவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக
அறை முன் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுப் பெட்டியில், மே 15ம் தேதி மாலை வரை,
ஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடும் அனைவரும், மே 15ம் தேதி வரை, ஓட்டு
போடலாம்.







