தேர்தல் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்கு,
பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொகுதியில் பதட்டமான
ஓட்டுச் சாவடிகளில் பெண் ஊழியர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள். நகர் புறம்
மற்றும் அதிக போக்குவரத்து வசதி உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்கள் அதிகமாக
தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல் பணியில்
ஈடுபடுவோருக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓட்டுப் பதிவு
அதிகாரிகளின் நலன் கருதி, ஓட்டு பதிவு உபகரணங்கள் கொண்டு செல்லும்
வாகனங்களுடன், சிறப்பு மருத்துவ குழுவினரும் உடன் செல்ல ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை இடுக்கி மாவட்ட கலெக்டரும், தொகுதியின் தேர்தல் அதிகாரியுமான அஜித்பாட்டில் தெரிவித்தார்







