இதையடுத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் யதுநாதன், தாராபுரம் போலீஸ் துணை சூப்பி ரண்டு இளங்கோவன், தாசில்தார் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள். அப்போது பொதுமக்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவ தாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கைது
அதை ஏற்று பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பள்ளிக்கூடம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவர்தனாம்பிகை, தண்டாயுதபாணி ஆகியோர் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு சின்னக்காம் பட்டியை சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் குப்புச் சாமியை (வயது 55) கைது செய்தனர்.








