தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 9) கடைசி நாளாகும்.தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2,800
இடங்களும், அரசு உதவி பெறும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு
ஒதுக்கீட்டுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன.
இந்த இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் மே 14-ஆம் தேதி தொடங்கியது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை
சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
இந்த விண்ணப்பங்களைப் பெறவும், பூர்த்திசெய்த விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்கவும் ஜூன் 2 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,
மாணவர் நலனுக்காக விண்ணப்ப தேதி, ஜூன் 9 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.








