சென்டாக் 2ம் கட்ட மருத் துவ கவுன்சலிங்கில் நர்சிங், ஆயுர்வேதா படிப்பில் சேர மாணவ& மாணவிகள் ஆர்வம் காட்டினர்.புதுவையில்
ஆண்டுதோறும் மருத்துவம், பொறி யியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் சென்டாக்
மூலம் நிரப்பப்பட்டு வரு கிறது. பெரும்பாலான இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன.
மிக குறைந்த எண்ணிக்கையிலான இடங் களே காலியாக இருந்தன.இந்நிலையில்
புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கான 2ம்கட்ட மருத் துவ கவுன்சலிங் நேற்று
சென்டாக் அலுவலகத்தில் தொடங்கியது. இதில் 200 முதல் 165 கட்&ஆப் மதிப்
பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். நேற்று மட்டும் 1400 மாணவர்களுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள்
பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
மருத்துவம்,
துணை மருத்துவத்தில் மிக குறைந்த இடங்களே இருந்ததால் அவற்றை பெறுவதில்
மாணவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. மதர்தெரசா நர்சிங், மாகே
ஆயுர்வேதா, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கான இடங்கள் உடனே
நிரம்பின.
பல் மருத்துவ கல்லூரியில் சேர பெரும்பாலான மாணவர் கள் விரும்பவில்லை. பாது காப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று
164.666 முதல் 141.666 வரை கட்&ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து
கொள்ள லாம். மேலும் தகவலை சென்டாக் இணையதளத்தை பார்த்து தெரிந்து
கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.







