புதுச்சேரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு
கழகத்தின் மூலம் கடந்த 2013&14ம் ஆண்டு புதுச்சேரியை சேர்ந்த
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின
இளைஞர்கள் 15 பேர் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு சென்னையிலுள்ள
முன்னணி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டிற்கு இலவச பயிற்சி பெற்று
வருகின்றனர். அவர்கள் அனைவரும் வருகிற ஆகஸ்ட் மாதம் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு
எழுத உள்ளனர். இந்நிலை யில் 2014&15ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் இலவச
பயிற்சிக்கு கடந்த 27ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க 10ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்கும் அனைவருக்கும்
எழுத்துத்தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற 15
நபர்களுக்கு சென்னையிலுள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஓர் ஆண்டுக்கு இலவச
பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவற்றை
மேம்பாட்டு கழகமே ஏற்கும். விண்ணப்பங்கள் புதுச்சேரி அண்ணா நகரில் உள்ள
தலைமை அலுவலகத்தில் மற்றும் காரைக்கால் கிளை அலுவலகத்தில் கிடைக்கும்.







