பாரதியார்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். நுழைவுத்தேர்வு
தேதி ஜூலை 27-ஆம் தேதிக்கு
மாற்றம்செய்யப்பட்டுள்ளது.பாரதியார்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்விக் கூடத்தின் எம்.எட். படிப்பில்
சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ஆம் தேதி
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுவதாக
இருந்தது. அதேநாளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வும் நடைபெற உள்ளது. எனவே,
நுழைவுத்தேர்வை வேறு தேதியில் வைக்க
வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் வேண்டுகோள்
வந்தது.
அதையேற்று,
நுழைவுத்தேர்வு தேதி 20- ஆம் தேதிக்குப் பதிலாக
27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. மேலும்
விவரங்களுக்கு, பாரதியார் பல்கலைக்கழகத்தின்
http://www.b-u.ac.in/இணையதளத்தைப்
பார்த்து தெரிந்துகொள்ளலாம்.