மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான
தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான தேர்வை
நடத்தி மாணவர்களை கல்லூரியில் சேர்த்து கொள் வதற்கான வழிமுறைகளை
உச்சநீதிமன்றம் வகுத்தது. அதன் விளைவாக அனைத்து மாநில அரசுகள் உயர்கல்வி
சேர்க்கை ஆணையத்தை அமைக்கிறது. அதன்படி புதுவையில் அமைய பெற்ற சேர்க்கை ஆணை
தலைவராக செயல்படுபவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுக பெருமாள்
ஆதித்தன் ஆவார். அவரது தலைமையில் செயல்படும் ஆணையம் புதுவையில் உள்ள
சுயநிதி, சிறுபான்மையினர் மற்றும் நிகர்நிலை பல்கலை கழகங்களின் கீழ்
செயல்படும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் நிர்வாக
ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்து கொள்வதற்காக நடைபெறும் நுழைவு தேர்வில்
வல்லுனர்களை கொண்டு குழுமம் நியமிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக
புதுவையில் உள்ள மத்திய பல்கலை கழகத்தின் துணைவேந்தர், ஜிப்மர் தன்னாட்சி
நிறுவன இயக்குனர், புதுவை சுகாதாரத்துறை செயலர், புதுவை உயர் மற்றும்
தொழில்நுட்ப கல்லூரி துறையின் இயக்குனர் கொண்ட குழுவை அமைத்திட வேண்டும்.
மேற்படி
கல்லூரிகள் சுட்டிக்காட்டிய உறுப்பினர்களை கொண்டு மாணவர்களை தேர்வு
செய்தால் தவறுகளுக்கு வழிவகுக்கும். ஆகவே தேர்வு தாள் தயார் செய்தல்,
விடைத்தாள் திருத்தல், தேர்வை கண்காணித்தல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல்
போன்றவற்றை துறைகளை சேர்ந்த அதிகாரிகளை குழுவாக நியமித்து அந்த குழுவே
செயல்பட வேண்டும்.
அப்போதுதான்
உச்சநீதிமன்றம் வகுத்த உத்தரவுப்படி மேற்படி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ்
வரும் இடங்களுக்கான படிப்புகளில் தகுதியும், தரமும் உள்ள மாணவர்கள் அதிக
நன்கொடை இல்லாமல், குறைந்த கட்டணத்தில் கல்லூரி நிர்வாகத்தால் தேர்வு செய்ய
அறிவுறுத்தப்படுவார்கள்.
இவ்வாறு
செயல்படாமல் வெறும் கண்துடைப்புக்காக மேற்படி உயர்கல்வி சேர்க்கை குழுமம்
செயல்படுமானால், உச்சநீதிமன்றம் வகுத்த நெறிகள் அர்த்தமற்றதாக போய்விடும்.
மேலும் அதிக நன்கொடை பெற்று நிர்வாக ஒதுக்கீட்டில் தரமற்ற மாணவர்களை சேர்த்து கொள்ளும் நிலைமை உருவாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.







