பள்ளிப்
பாடத்திட்டத்தில், 'செஸ்' விளையாட்டை சேர்க்க, மாநில முதன்மை உடற்கல்வி
ஆய்வாளர் தலைமையில், நிபுணர் குழு அமைத்து, பள்ளிக்கல்வித் துறை பணிகளை
துவங்கியுள்ளது.பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த 2013 - -14ம் கல்வி
ஆண்டு முதல், சதுரங்கப் போட்டி எனப்படும், செஸ் போட்டியை அறிமுகப்படுத்தி,
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'செஸ் கிளப்'
துவங்கப்பட்டது.
கடந்த கல்வியாண்டு,
மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்ற மாணவியரிடம், தனித்தனியாக
ஆய்வறிக்கை நடத்த, நில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கலைச்செல்வன் தலைமையில்,
ஆறு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.