வருங்கால
மாணவர்களின் நலனை பாதுகாக்கவும் ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்கவும் இந்த
பத்து கோரிக்கைகளையும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வைக்க உதவுங்கள்
அனைவரும் முதலமைச்சர் தனி பிரிவுக்கு அனுப்ப உதவுங்கள்
1) இனி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை உடனடியாக அமல்படுத்த உதவ வேண்டும் அம்மா.
2)தொடக்கப்பள்ளியில்
மழலையர்கல்வி கொண்டு வர வேண்டும் இதற்கு என தனியாக ஆசிரியர் நியமனம்
செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உதவ வேண்டும் அம்மா.
3)அரசு
பள்ளிகளில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனி பதவி
உயர்வுக்கு அவர்களுக்கு 6-14 வயதுடைய குழந்தை இருந்தால் அவர்களை அரசு
பள்ளியில் சேர்த்தால் பதவி உயர்வில் முன்னுரிமை அளித்தும் இனிவரும் புதிய
அரசு உழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில்
சேர்ப்பதை கட்டாயப்படுத்த உதவ வேண்டும். ஏன் என்றால் உயர் அதிகாரிகள்
தங்கள் குழந்தைகளை பார்க்க பள்ளிகளுக்கு வரும் போது அங்கு உள்ள குறைகளை
எளிதாக களைய அரசுக் பரிந்துரைக்க வழிவகை செய்ய முடியும் இதற்கு தாங்கள்
ஆணையிட உதவுங்கள் அம்மா.
4) கம்யூட்டர் பொது
அறிவு யோக சிறப்பு பயிற்சிகள் போன்ற புதிய பாடத்திட்டங்களை தனியார்
பள்ளிகளுக்கு இனையாக அதற்கேற்ற தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்ய உதவ
வேண்டும் அம்மா.
5)பள்ளி
மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி படுத்தும் வகையில் அவர்களுக்கு
என்று காலை மற்றும் மாலை சிறப்பு பேருந்து இயக்க உதவ வேண்டும் அம்மா.
6) விளையாட்டு செஸ்
போன்ற பள்ளி அளவிலான போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இனையாக
அரசுபள்ளி மாணவர்களும் பல சாதனைகளை படைக்க அதற்கேற்ற விளையாட்டு உபகரணங்கள்
மற்றும் முறையான பயிற்சி அளிக்க உதவ வேண்டும்.
7)இனையதளத்தின்
மூலம் அதிவேக இனையதளம் மூலம் பள்ளியின் கற்றல் கற்பித்தலை கல்வித்துறையில்
இருந்து தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக்
முறையில் வருகையை கண்காணிக்க தாங்கள் ஆனையிடுங்கள் அம்மா.
8) மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புனர்வுடன் அவர்களுக்கு
சுத்தமான தண்ணீர் கழிப்பறை போன்ற வசகிகளை உறுதி செய்து தர தாங்கள் உதவ வேண்டும் அம்மா.
9) மாணவர்களுக்கு
புதிய முறையிலான smart class முறையில் பாடம் நடத்த வேண்டும் அதற்கு ஏற்ற
முறையில் புதிய மென்பொருள்களை பள்ளிகளுக்கு வழங்க தாங்கள் உதவ வேண்டும்.
10)மாணவர்களுக்கு
சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற சீறிய சிந்தனையில்
ஆசிரியர்கள் தன் குழந்தை போல் பிற குழந்தைகளையும் பாவிக்க தாங்கள்
ஆனையிடுங்கள் அம்மா
அனைவரும் இந்த
கோரிக்கைகளை நமது முதல்வர் அம்மா அவர்களுக்கு வைக்க உதவுங்கள் முதலமைச்சர்
தனிபிரிவு இமெயிலுக்கு அனுப்பி உதவுங்கள் E-Mail : cmcell@tn.gov.in
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...