தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கல்வித்துறை முதன்மை
செயலர், சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிக்கல்வி
இயக்குனர், ராமேஸ்வர முருகன், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல்
வகுப்பறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட,
உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அனுமதி கோரியிருந்தார்.
அதை
ஏற்று, 1,335 கூடுதல் வகுப்பறைகள், 184 ஆய்வகங்கள், மாணவர்களுக்கு, 270
கழிப்பறைகள், மாணவியருக்கு, 333 கழிப்பறைகள் மற்றும், 50 ஆயிரத்து 110
மீட்டருக்கு சுற்றுச்சுவர் ஆகிய உள்கட்டமைப்புவசதிகளை ஏற்படுத்த, அனுமதி
வழங்கப்படுகிறது.இத்தகைய வசதிகள், நடப்பு கல்வி ஆண்டிற்குள், 248 கோடி
ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.இதில், 'நபார்டு' வங்கி நிதியுதவி மூலம்,
149.34 கோடி ரூபாயும், தமிழக அரசு, 98.40 கோடி ரூபாயும் வழங்கும்.இவ்வாறு,
செயலர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...