தரம் உயர்த்தப்பட்ட
100 மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 30, 31 ஆகிய
தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:நிகழாண்டில்
(2014-15) 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்காக அனுமதிக்கப்பட்ட தலைமையாசிரியர்
பணியிடங்கள், ஏற்கெனவே காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது.
இந்தப் பள்ளிகளில்
பணிபுரிந்து வரும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல்
வழங்கும் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.31) நடைபெற உள்ளது. இந்தப்
பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் அன்றைய தினமே நடைபெற உள்ளது.
அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் காலை 10 மணி முதல்
கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...