இந்தத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககமே வெளியிடலாம். ஆனால், முடிவுகளை வெளியிடுவதற்கு முன் தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சிலின் ஒப்புதல் பெறப்படும். அடுத்த இரண்டு மாதத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்டத் தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சில் சார்பில், இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்த ஆண்டு மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரண்டு கட்டடங்களிலும் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது மாதம் ரூ.1,250-ம், இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும். ஆராய்ச்சிப் படிப்பின்போது வழங்கப்படும் உதவித் தொகை பின்னர் நிர்ணயிக்கப்படும்.








