அருப்புக்கோட்டை
பள்ளி மாணவர் கண்டு பிடித்த ஆளில்லா விமான மாதிரி படைப்பு தேசிய அளவில்
நடைபெறும் கண்காட்சியில், தமிழகத்தின் 4 படைப்புகளில் இதுவும் ஒன்றாக
தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாணவர்களின்
அறிவியல் திறன் மற்றும் புதிய படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி
கல்வி துறை மூலம் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள்
தங்கள் கண்டு பிடித்துள்ள படைப்புகளை கண்காட்சியாக வைத்து அசத்தி
வருகின்றனர். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர்
ஆசிக் இலாஹி கான், ஆளில்லா விமானத்தை (குவாட் காப்டர்) வடிவமைத்து தேசிய
அளவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். 4 மோட்டார்கள் மற்றும் 4
இறக்கைகளுடன் இயங்க கூடிய அளவில் அமைத்து, இதில் கேமரா (வைபி) ஜி.பி.எஸ்.,
கருவி, தட்பவெப்பநிலை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.பறந்து
செல்லும்போது கீழே உள்ள இலக்குகள் தெளிவாக தெரியும். விமானம் "ரிமோட்'
மூலம் இயக்கப்படுகிறது. எதிரிகளின் இலக்குகளை ஏவுகணை கொண்டு துல்லியமாக
தாக்க இது பயன்படும்.
"சோலார்' மூலம்
விமானத்தை இயக்கவும் மாணவர் முயற்சி செய்து வருகிறார். இந்த படைப்பிற்கு
அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் முதல்
இடம் கிடைத்துள்ளது. காரியாபட்டி சேது இன்ஜி., கல்லூரியில் நடந்த அறிவியல்
கண்காட்சியில் 2 ம் இடத்தை பெற்றுள்ளார். மாநில அளவில் சென்னை தாம்பரம்
ஜெய்கோபால் கரோடியா மேல்நிலை பள்ளியில் நடந்த "சுற்று சூழல்' என்ற தலைப்பில
3 வது இடத்தை பிடித்துள்ளார். தேசிய அளவில் சண்டிகரில் நடைபெறும்
நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 4 படைப்புகளில் இந்த
மாணவரின் படைப்பும் ஓன்று. மாணவருக்கு ஆசிரியர் சரவணகுமார் வழிகாட்டியாக
இருந்துள்ளார். மாணவரை எஸ்.பி.கே., கல்வி குழும தலைவர் சுதாகர்,
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சாம்ராஜ், பள்ளி செயலர்
காசிமுருகன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் நிர்வாக குழுவினர்,
ஆசிரியர்கள் பாராட்டினர்.







