பின்னர், விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து வீடு, வீடாக சென்று கள விசாரணையை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். கள விசாரணையின் போது விவரங்கள் தவறானவை என சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர் ந்து சம்பந்தப்பட்ட வாக் காளர் பதிவு அதிகாரிகளால் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்நிலையில், புகைப்படத்து டன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி வழங்கப்படும். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்படும். அதன் பின்னரும் வாக்காளர்கள் பட்டி யலில் சேர்க்கும் பணி நடைபெறும். வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க நடவ டிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரசாரம் மேற்கொள்ளப்படும்‘ என்றனர்.
பின்னர், விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து வீடு, வீடாக சென்று கள விசாரணையை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். கள விசாரணையின் போது விவரங்கள் தவறானவை என சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர் ந்து சம்பந்தப்பட்ட வாக் காளர் பதிவு அதிகாரிகளால் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்நிலையில், புகைப்படத்து டன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி வழங்கப்படும். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்படும். அதன் பின்னரும் வாக்காளர்கள் பட்டி யலில் சேர்க்கும் பணி நடைபெறும். வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க நடவ டிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரசாரம் மேற்கொள்ளப்படும்‘ என்றனர்.








