புதுவை பகுதிக்கு என பிரத்யேகமாக இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மித்ரா (ஙர்க்ஷண்ப்ங் ஐய்ண்ற்ண்ஹற்ங்க் பழ்ஹஸ்ரீந்ண்ய்ஞ் ஹய்க் தங்ள்ஸ்ரீன்ங் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்-ஙஐபதஅ) என்ற ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்தில் செல்லிடப்பேசி பயன்பாட்டு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணைப் பேராசிரியை சிவசத்யா கூறியதாவது: மித்ரா மென்பொருளை உருவாக்க எங்களுக்கு 6 மாதங்கள் ஆனது. தற்போது புதுவைப் பகுதிக்கு மட்டும் என இதை உருவாக்கி உள்ளோம். ஆபத்துக் காலத்தில் ஒருவரால் உடனே செல்லிடப்பேசியை இயக்கவோ, மென்பொருளை இயக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ முடியாது.
அந்நேரத்தில் செல்லிடப்பேசியின் ஒலி பட்டனை நீண்ட நேரம் அழுத்தியபடி இருப்பின் மித்ரா மென்பொருள் அருகே உள்ள காவல் நிலையத்துக்கும், மித்ராவில் பதிவு செய்யப்பட்டுள்ள 3 நண்பர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கும் ஆபத்துக் கால குறுஞ்செய்தியை அனுப்பும்.
மேலும், புதுவையில் உள்ள காவல் நிலையங்கள், அவற்றின் தொலைபேசி எண்கள், தொண்டு நிறுவனங்கள், உதவி மையங்கள் போன்றவை குறித்தும் மித்ரா மென்பொருள் தெரியப்படுத்தும்.
தெரியாமல் ஒரு பெண் ஒலி பட்டனை அழுத்தி விட்டாலும், மீண்டும் அழுத்துவதின் மூலம் அதைத் தடுக்கலாம். இணையதள இணைப்பு இல்லாத செல்போனிலும் மித்ராவை பயன்படுத்தலாம். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடனும் பேசி உள்ளோம். இலவச மித்ரா மென்பொருள் தொடர்பான விவரங்களை எங்கள் பல்கலைக்கழக இணையதளம்
ஜ்ஜ்ஜ்.ல்ர்ய்க்ண்ன்ய்ண்.ங்க்ன்.ண்ய்-ல் அறிந்து பதிவிறக்கம் செய்யலாம் என்றார்.
மென்பொருள் அறிமுகம்: இதனிடையே புதுவை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்த உலக மகளிர் தின விழாவில், மித்ரா மென்பொருளை துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். பெண்ணியல் படிப்பு மையத் தலைவர் ஆர்.நளினி, மகளிர் நலக்குழுத் தலைவி ஜி.சந்திரிகா, இயக்குநர் இந்துமதி, ஒலாந்திரியேத் சமூக அமைப்பு நிறுவனர் மாம்டிபிலிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








