வரியில்லா பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரங்கள் வருமாறு:-
நிதி ஆலோசகர்
பங்கு சந்தை தொடர்பான ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகராக பணிபுரியும் எஸ்.அனிதா இந்த பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது:-
எத்தகைய ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் தமிழக அரசு தன் நிதிநிலையை
எதிர்நோக்கி இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக தெரிவிக்கும் பட்ஜெட் இது.
நிச்சயமாக ஜெயலலிதா முதல்வராக இல்லாதது இந்த பட்ஜெட்டில் எதிரொலித்துள்ளது
என்ற போதிலும், புதிய வரிகள் எதுவும் போடப்படாமல், கடுமையான நிதிச்சுமைக்கு
இடையில் 650 கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை அளித்திருப்பது மிகவும்
வரவேற்கத்தக்கது.தமிழகத்தின் 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த விவரங்கள் வருமாறு:-
நிதி ஆலோசகர்
பங்கு சந்தை தொடர்பான ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகராக பணிபுரியும் எஸ்.அனிதா இந்த பட்ஜெட் குறித்து கூறியிருப்பதாவது:-
அதிலும் குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்ட செல்போனின் மதிப்பு கூட்டு வரியை 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து இருப்பது வரவேற்கத்தக்கதாகும். 113 அணைகளை புனரமைக்க 450 கோடியே 13 லட்சம் ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டியது என்றாலும் இன்னும் கூடுதலாக நிதி ஒதுக்கி இருக்கலாம்.
நான் மேட்டூரை சேர்ந்தவள் என்ற முறையில் கூறுகிறேன், மேட்டூர் அணையை நன்றாக ஆழப்படுத்தி, புனரமைத்து, கால்வாய்களை எல்லாம் ஆழப்படுத்தி சீரமைத்தால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை தழைக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இல்லத்தரசி
சென்னை ராமாவரத்தை சேர்ந்த இல்லத்தரசி வி.ஷர்மிளா பட்ஜெட் குறித்து கூறியதாவது:-
அம்மா மீண்டும் முதல்- அமைச்சராக வருவார், அள்ளித்தருவார் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்கும் பட்ஜெட் இது. அதனால்தான், பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தனது உரையின் இறுதியில், ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்று, இந்த பேரவைக்கு வந்து நம்மையும், இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அர்ப்பணிப்புணர்வுடனும் வழிநடத்தி, மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டுசெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று முடித்திருக்கிறார்.
புதிய வரிகள் எதுவும் பட்ஜெட்டில் போடாவிட்டாலும், ரூ.650 கோடி அளவில் பல வரிச்சலுகைகளை அளித்துள்ளார். ஆனால், செல்போனுக்கான மதிப்புக்கூட்டுவரி குறைந்திருப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கது என்றாலும், மற்ற வரிச்சலுகைகளால் விலைவாசி குறைவதற்கான வாய்ப்புகள் எதுவும் பெரிதளவில் இல்லை.
இதனால் எனது மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. விவசாயத்துக்கு முதலிடம் கொடுத்து, ரூ.5 ஆயிரத்து 155 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து நிதி ஒதுக்கியிருப்பது, விவசாயிகளுக்கு நிச்சயமாக பெரும் பயனளிக்கும். சென்னை நகரை பொறுத்தமட்டில், மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ரூ.615 கோடியே 78 லட்சம் ஒதுக்கி, மத்திய அரசாங்கம் அளிக்கவேண்டிய தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்திருப்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செல்போன் கடை அதிபர்
சென்னை வேப்பேரியில் செல்போன் கடை நடத்தி வரும் விக்னேஷ் ராஜா பட்ஜெட் பற்றி கூறும்போது:-
தமிழக பட்ஜெட்டில் செல்போனுக்கு வரிகுறைக்கலாம் என்று பலரும் கூறினார்கள். அதை நம்பி நானும் இருக்கிற செல்போன்களை விற்றுவந்தேன். புதிதாக செல்போன்கள் எதுவும் வாங்கவில்லை. அதன்படியே தமிழக அரசு செல்போனுக்கு மதிப்பு கூட்டு வரியை 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இது பெரும்பாலான மக்களால் வரவேற்கத்தக்கது.
தற்போது ரூ.950-க்கு விற்கப்படும் செல்போன் இனிமேல் ரூ.90 குறைத்து விற்கப்படும். அதுபோல எனது கடையில் அதிக விலை செல்போனான ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்படும் செல்போன் இனிமேல் ரூ.1740 குறைவாக விற்கப்படும். செல்போன் விலை குறைப்பால் நிறைய வாடிக்கையாளர்கள் செல்போன் வாங்குவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கல்லூரி மாணவி
கல்லூரி மாணவி மாலினி என்பவர் கூறும்போது, “நான் தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவள். தற்போது சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 3-வது ஆண்டு படித்து வருகிறேன். தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது. குறிப்பாக செல்போனுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனால் செல்போன் விலை நன்றாக குறையும். நான் செல்போன் பயன்படுத்துகிறேன். புதிதாக செல்போன் வாங்க உள்ள அனைவருக்கும் செல்போன் குறைந்த விலையில் வாங்க முடியும். எனவே தமிழக பட்ஜெட்டை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.
சென்னை புரசைவாக்கத்தில் பழக்கடை நடத்தி வரும் பெண் வியாபாரி தேவி கூறும்போது, “நானும், எனது கணவர் வேலுவும் சேர்ந்து சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் பழக்கடை நடத்தி வருகிறோம். தமிழக பட்ஜெட் பற்றி டி.வி.யில் ஒளிபரப்பியதை பார்த்தேன். சாதாரண மக்களும் பயன்படுத்தும் செல்போனுக்கு வரி குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை முழுவதும் வரவேற்கிறேன். எங்கள் வீட்டில் 3 செல்போன் பயன்படுத்துகிறோம். செல்போன் விலை குறையும் என்பதால் இனிமேல் புது செல்போன் வாங்குவேன்” என்று தெரிவித்தார்.