திருமங்கலம் அருகே 9ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 2 மாணவர்கள், ரயில்
தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்ைத
ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலக்கோட்டை ஹவுசிங்
போர்டு பாரதி நகரை சேர்ந்தவர் முனியப்பன். சமையல் மாஸ்டர். இவரது மனைவி
வீரம்மாள். இவர்களது மகன் சங்கரபாண்டி (16). ஏ.தொட்டியபட்டியைச் சேர்ந்தவர்
பாண்டியம்மாள். பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சஞ்சய் கண்ணன்
(16). திருமங்கலம் அருகே ஆலம்பட்டியிலுள்ள பள்ளியில் சங்கரபாண்டியும்,
சஞ்சய்கண்ணனும் 9ம் வகுப்பு படித்து வந்தனர்.
9ம் வகுப்பு இறுதித்தேர்வில் அப்பள்ளியில் இவர்கள் உள்பட 6 மாணவர்கள்
தோல்வியடைந்தனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்த பின், இவர்களுக்கு
மறுதேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றால் இருவரும் 10ம்
வகுப்பிற்கு செல்லலாம். இல்லாவிட்டால் 9ம் வகுப்பிலேயே படிப்பை தொடர
வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. தேர்வு முடிவுகள் நேற்று
மாலை அறிவிக்கப்பட இருந்தன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மாணவர்கள்
சங்கரபாண்டியும், சஞ்சய்கண்ணனும் டியூசன் செல்வதாக பெற்றோரிடம் கூறி
விட்டுச் சென்றவர்கள் திரும்பவில்லை.
காலை வரை தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. திருமங்கலம் -
விருதுநகர் சாலையில் கரிசல்பட்டி கிராமம் அருகே தண்டவாளத்தில் தலை
துண்டிக்கப்பட்ட நிலையில் இருவரது உடல்களும் நேற்று காலை கிடந்தன. ரயில்வே
போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.