முந்தைய ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். படிப்பில்
சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்து, இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள்
தொடர்ந்துள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை
தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணிக்குத் தொடங்கும் நிலையில் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
பழைய மாணவர்களை எதிர்ப்பது ஏன்? சென்னை நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபிநாத் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு (2015-ஆம் ஆண்டு) பிளஸ் 2 தேர்வு
எழுதிய மாணவர்களை மட்டுமே நிகழ் கல்வியாண்டுக்கான (2015-16) எம்.பி.பி.எஸ்.
கலந்தாய்வில் அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) காலை 9 மணிக்குத் தொடங்கும் நிலையில் இந்த வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
பழைய மாணவர்களை எதிர்ப்பது ஏன்? சென்னை நந்தனத்தைச் சேர்ந்த டாக்டர் நல்லி ஆர்.கோபிநாத் உள்பட 60-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பதாவது:
ஏனெனில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்- இயற்பியல்- வேதியியல் ஆகிய பிளஸ் 2 பாடத் தேர்வுகள் கடினமாக இருந்ததால், குறைவான மதிப்பெண்களைத்தான் மாணவர்கள் பெற முடிந்தது. ஆனால், கடந்த கல்வி ஆண்டில் மேலே குறிப்பிட்ட முக்கியப் பாடங்களின் தேர்வுகள் எளிமையாக இருந்ததால், ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 17 பேர் மட்டுமே.
இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 2,710 பேர் முழு மதிப்பெண்கள் (200-க்கு 200) பெற்றனர். ஆனால், இந்த ஆண்டு 124 மாணவர்கள்தான் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இதேபோன்று, இதர இரு பாடங்களிலும் (உயிரியல், வேதியியல்) கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான மாணவர்களே முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சம வாய்ப்பு பாதிக்கப்படும்: கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனுமதித்தால், நிகழாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதை சம வாய்ப்பு எனக் கருத முடியாது. நிகழாண்டு மாணவர்களுக்கு அநீதி இழைத்ததாகிவிடும்.
கடந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டுக்கும், இந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீட்டுக்கும் வேறுபாடு உள்ளது. அவர்களை கலந்தாய்வுக்கு அனுமதித்தால், அவர்கள்தான் அதிகம் நன்மை பெற வழிவகுக்கும்.
கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள் வேறு படிப்பில் சேர்ந்து, அதை நிறுத்திவிட்டு மருத்துவக் கலந்தாய்வுக்கு வரக்கூடும். இதனால் ஒருவருக்கு மட்டும் பாதிப்பு அல்ல, நிகழாண்டு மாணவர்கள் அனைவருக்கும் பாதிப்பாக அமைந்துவிடும்.
எனவே, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வில் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
-இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு, நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு கடந்த 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களைப் பங்கேற்க அனுமதித்து சேர்க்கைக் கடிதம் அளித்தால், அது இந்த வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்படும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேல் முறையீட்டு மனு: இந்த நிலையில், தனி நீதிபதி எம்.சத்யநாராயணனின் முந்தைய உத்தரவுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கபிலன் என்ற மாணவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நிகழாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள பழைய பிளஸ் 2 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் வி.ராகவாச்சாரி, அரசு தரப்பில் வழக்குரைஞர் கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகினர்.
விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்குவதால் இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.