பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம், மேம்பாடு) எஸ். வைத்திய சுப்பிரமணியம் பேசியது:
இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் பி.டெக்., ஐந்தாண்டு எம்.டெக். படிப்புகளில் உள்ள 1,600 இருக்கைகளுக்கு அகில இந்திய அளவில் 18,000 விண்ணப்பங்கள் வந்தன.
இதில், 78 சத மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 90 சதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள். ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்ற மாணவர்களின் வருகையும் இப்பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு அதிகரித்துள்ளது.
நிகழாண்டு வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், அருணாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை மூலம் கல்விக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது என்றார் வைத்திய சுப்பிரமணியன். இந்தக் கலந்தாய்வு தொடர்ந்து ஜூன் 27 வரை நடைபெறவுள்ளது.








