1,241 பணியிடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு 6¼ லட்சம் பேர் தேர்வு எழுதினர்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


1,241 பணியிடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு 6¼ லட்சம் பேர் தேர்வு எழுதினர்:

தமிழகத்தில் 1,241 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்–2 தேர்வை 6¼ லட்சம் பேர் எழுதினர்.
குரூப்–2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2 பதவியில் அடங்கிய உதவி வணிக வரி அதிகாரி, சார்–பதிவாளர் கிரேடு–2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லோக்கல் பண்ட் ஆடிட் டிபார்ட்மென்ட் உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர், வேளாண்மைத்துறை விற்பனை இளநிலை கண்காணிப்பாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 18 வகையான துறைகளில் காலியாக உள்ள 1,241 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.
சென்னை சாந்தோம் பாபநாசம் சாலையில் உள்ள ரோசாரி பள்ளி மற்றும் சாந்தோமில் உள்ள சென்பீட்ஸ் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் சி.பாலசுப்பிரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது:–

முறைகேடுகளை தடுக்க வீடியோ பதிவு
குரூப்–2 பதவியில் அடங்கிய 1,241 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழகத்தில் 1,511 மையங்களில் நடந்தது. இதில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 200 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 64 ஆயிரத்து 309 பேர் 167 மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் 75 சதவீதம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

தேர்வை கண்காணிக்க 2 ஆயிரத்து 94 தலைமை கண்காணிப்பாளர்களும், 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டனர். 282 பறக்கும் படையினரும், 327 மொபைல் பிரிவினரும் தேர்வை கண்காணித்தனர். முறைகேடுகளை தடுக்க ஆயிரம் பேருக்கு மேல் தேர்வு எழுதும் மையங்களில் வெப் கேமராவும், ஆயிரம் பேருக்கு குறைவாக தேர்வு எழுதும் மையங்களில் வீடியோ பதிவும் செய்யப்பட்டன. இதில் 1,800 பேர் ஈடுபட்டனர்.

மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் பணி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வாணையம் வரலாற்றிலேயே முதன் முறையாக 89 மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் அதாவது அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

குரூப்–1 தேர்வுக்கு கடந்த 24–ந்தேதி நிலவரப்படி 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் உள்ளது. அதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள உதவி–பொறியாளர் (சிவில்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வார காலமாகி உள்ளது. மேலும் இதற்கான காலஅவகாசம் அடுத்த மாதம் வரை இருக்கிறது. அதற்கு பிறகே இதில் எவ்வளவு பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று தெரியவரும். இந்த தேர்வுக்கான அடிப்படை பணிகள் நடந்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H