பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவு: ஆசிரியர்
தேர்வு வாரியத் தகுதித்தேர்வில் 83 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களின்
தேர்ச்சி குறித்து ஐகோர்ட் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பாணை மீது உச்ச
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
90 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 33 பார்வை
குறைப்பாடுடைய மாற்றுத்திறனாளிகள் பட்டியல் தற்போது பெறப்பட்டுள்ளது.
பட்டியலில் உள்ள பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளை அவர்களின்
வீட்டுக்கு அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலி பணியிடங்களில்
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்ய வேண்டும்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு உதவி பெறும்
பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்,
சிறப்பாசிரியர்கள் காலி பணியிடங்களில் பார்வை குறைபாடுடைய
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...