ஒழுக்கமற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த தகுந்த
நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், சமீபகாலமாக ஆபாச படங்கள் பார்த்தல், மது அருந்துதல்,
ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற பல்வேறு புகார்கள் மாணவர்களின் மீது பதிவு
செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவங்கள் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும்
பீதியை கிளப்பியுள்ளது.இதை தொடர்ந்து, மாணவர்களுக்கு மது அருந்துவதால்
ஏற்படும் விளைவுகள், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், வளர் இளம்
பருவத்தில் ரீதியான உடல் மனரீதியான மாற்றங்கள் குறித்து, இறை வணக்க
கூட்டங்களிலும், நீதிபோதனை வகுப்புகளிலும் தொடர்ந்து விளக்கங்கள் அளித்து
நல்வழிப்படுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், இதுகுறித்த சுற்றறிக்கை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
அனுப்பப்பட்டு செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில்
மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து மாணவர்களின் நடவடிக்கைகளை இருதரப்பினரும்
அறிந்துகொள்ளும் வகையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...