பணிபுரியும் மகளிருக்கான பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்தும்
திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நாடாளுமன்றத்தில்
திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான கேள்விக்கு, மத்திய தொழிலாளர்,
வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில்
எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பேறுகால சலுகைச் சட்டத்தின்படி, பணிபுரியும் மகளிருக்கு தற்போது 12
வாரங்கள்(சுமார் 3 மாதங்கள்) பேறுகால விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இனி,
அதை 24 வாரங்களாக (சுமார் 6 மாதங்கள்) உயர்த்துவது தொடர்பாக அரசு
பரிசீலித்து வருகிறது.எனினும், ஊழியர்களுக்கான போனûஸ இரட்டிப்பாக்கும்
திட்டம் அரசின் பரிசீலனையில்இல்லை. அதேபோல், ஊழியர்கள் வேலை மாறும்போது
பணிக்கொடைத் தொகையை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தும் திட்டம்
எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா
தெரிவித்தார்.
தற்போது, பணிபுரியும் மகளிருக்கு பிரசவம் எதிர்பார்க்கப்படும்
தேதியிலிருந்து 6 வாரங்களுக்கு முன்பும், பிரசவத்துக்குப் பின்பு 6
வாரங்கள் வரையும் என மொத்தம் 12 வாரங்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.போனûஸப்
பொருத்தவரை, ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீதமும், அதிகபட்சம் 20
சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...