முதலாவது ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி., சி - -30' ராக்கெட் மூலம் நேற்று காலை 10:00 மணிக்கு இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தப்பட்டது.அத்துடன் இந்தோனேஷியா, கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு சிறிய செயற்கைக்கோள்களும், பூமியில் இருந்து 650 கி.மீ., உயரத்தில் நீள்வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.
ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 'அல்ட்ரா -வைலட் இமேஜிங் டெலஸ்கோப், சாப்ட் எக்ஸ் - -ரே டெலஸ்கோப்' உள்ளிட்ட, ஐந்து முக்கிய கருவிகள் மூலம் சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ள வும் எக்ஸ் - -ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த செயற்கைக்கோள், ஐந்து ஆண்டுகளுக்கு, விண்வெளி ஆய்வில் ஈடுபடும்.இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி: இன்று எங்களுக்கு சிறப்பான நாள். விண்வெளி ஆய்வில், ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில்
செலுத்தப்பட்டு உள்ளது.இந்த செயற்கைக்கோளில் இருந்து பெறப்படும் தகவல்கள், இந்திய விண்வெளி இயற்பியல் நிறுவனம் - ஐ.ஐ.ஏ.பி., மற்றும் டாடா அடிப்படை ஆய்வு
நிறுவனம் - டி.ஐ.எப்.ஆர்., உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்களில் உள்ள நிபுணர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள் வடிவமைப்பில், 150 தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதலில், தொழில்
நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும்.'மங்கள்யான்' செயற்கைக்கோள், இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை, நான்கு படங்களை அனுப்புகிறது. 40 கோடி கி.மீ., துாரத்திற்கு அப்பால் மங்கள்யான் உள்ளதால் தகவல் அனுப்புவதிலும், பெறு
வதிலும் தாமதம் ஏற்படுகிறது. அந்த செயற்கைக்கோள், ஒரு ஆண்டு காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.வரும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் 'ஜிசாட் 15' செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படும். ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., வரிசையில் ஏற்கனவே நான்கு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு
உள்ளன. மீதியுள்ள மூன்று செயற்கைக்கோள்கள், 'ஹீலியோஸ்' செயற்கைக்கோள் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
சூரியனை ஆராய உருவாக்கப்படும் 'ஆதித்யா' செயற்கைக்கோள் திட்டத்தின் முதற்கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 'ஆர்யபட்டா முதல் ஆஸ்ட்ரோசாட் வரை' என்ற, 'சிடி' வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரோ மூலம் இதுவரை செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களின்
தகவல்கள் இந்த 'சிடி'யில் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.








