தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பயிற்சி
மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கக் கல்வி
ஆசிரியர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதற்காக
மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர் பயிற்சி செப்டம்பர் 16-ஆம் தேதியும்,
மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி செப்டம்பர் 21-ஆம் தேதியும் வழங்கப்பட
உள்ளது.அந்தந்த ஒன்றியங்களில் அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு நாள் பயிற்சி
வழங்கப்படுகிறது. ஒரு குழுவுக்கு 50 ஆசிரியர்கள் என்கிற விகிதத்தில்
தொடக்கப் பள்ளி ஒன்றியத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில்
பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என மாவட்ட
ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.







