தமிழக வனத்துறையின் பெரிய பொறுப்புகளில், ஐ.எப்.எஸ்., எனப்படும் இந்திய வனப்பணி அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு உரிய காலத்தில் கிடைத்து விடுகிறது.
குறிப்பாக, பல ஆண்டு காலமாக நிரப்பப்படாமல் இருக்கும், 1,000 காலிப் பணியிடங்களால் அதிக பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். இதனால், பணிகளில் தேக்கம் நிலவுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து, வனச்சரகர்கள் மற்றும் வனவர்கள் கூறியதாவது:வனத்துறையில், வனச்சரகர் பணி மிகவும் முக்கியமானது. மொத்தம் உள்ள, 527 பணியிடங்களில், 250 பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளன. இவர்களின் பணி, ஒரு விளையாட்டு அணியின் கேப்டன் பதவி போன்றது. ஒவ்வொரு சரகத்திலும், நான்கு வனச்சரகர் இருக்க வேண்டும்.
ஆனால், ஒருவர் அல்லது, இருவர் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இதனால், மரங்கள் நடும் திட்டம், மனிதர் - விலங்கு மோதல் தடுப்பு போன்றவை தொடர்பான பல பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியின் மூலை முடுக்குகளுக்கு சென்று பணிபுரியும் வனக்காவலர், 350; வனவர்-, 350; வாட்ச்சர்-, 300 என 1,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மரம் கடத்தல், வேட்டை தடுப்பு பணியில் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்








