இதனால், அந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வேறு முகவரியில் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஏமாந்து போகும் நிலை உருவாகும்.
எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்பான தகவலையும் யுஜிசி-க்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்: உத்தரப் பிரதேச மாநிலம்: அலாகாபாத் மகளிர் கிராம வித்யா பீடம், அதே நகரில் அமைந்துள்ள காந்தி ஹிந்தி வித்யா பீடம், கான்பூர் ஹோமியோபதி நேஷனல் பல்கலைக்கழகம், அலிகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம், மதுராவில் உள்ள உத்தரப் பிரதேஷ் விஷ்வ வித்யாலயா, பிரதாப்கரில் உள்ள மஹாராணா பிரதாப் சிக்ஷா நிகேதன் விஷ்வ வித்யாலயா, நொய்டாவில் உள்ள இந்திரபிரஸ்த சிக்ஷா பரிஷத், மதுராவில் உள்ள குருகுல விஷ்வ வித்யாலயா, விருந்தாவன்.
தில்லி: வாராணசி சம்ஸ்கிருத விஷ்வ வித்யாலயா, தரியாகஞ்ச் பகுதியில் உள்ள வணிகவியல் பல்கலைக்கழக நிறுவனம், யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், வொக்கேஷனல் பல்கலைக்கழகம், ஏடிஆர் சென்ட்ரிக் ஜுரிடிக்கல் பல்கலைக்கழகம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங்.
தமிழகம்: திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சம்ஸ்கிருத பல்கலைக்கழகம்.
பிகார்: தர்பங்கா பகுதியில் உள்ள மைதிலி பல்கலைக்கழகம்.
கர்நாடகம்: பெல்காமில் உள்ள படகான்வி சர்க்கார் வேர்ல்ட் திறந்தநிலை பல்கலைக்கழகம்.
கேரளம்: கிஷநத்தத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்.
மத்தியப் பிரதேசம்: ஜபல்பூர் கேசர்வானி வித்யா பீடம்.
மகாராஷ்டிரம்: நாக்பூர் ராஜா அரபிக் பல்கலைக்கழகம்.
மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேடிவ் மெடிசின் ஆகியவையே அந்தப் போலி பல்கலைக்கழகங்கள்.








