'குரூப் - 4' தேர்வு: கவுன்சிலிங் அறிவிப்பு'
'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர்,
தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்
பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர்
உட்பட, 4,693 காலியிடங்களுக்கானஎழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல்
நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இதில்,
தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது;ஜூன் முதல் ஆகஸ்ட்
மாதம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து, தகுதி பெற்றவர்களின்
தேர்வெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அவர்களில், இளநிலை உதவியாளர் பணிக்கு,
நவ., 16; தட்டச்சருக்கு டிச., 4; சுருக்கெழுத்து நிலை -3 பதவிக்கு, டிச.,
14ல் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை,
http://www.tnpsc.gov.in/results.html இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.