கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்கள்) நவம்பர் 24-ஆம் தேதி
முதல் செல்லாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம்
தெரிவித்துள்ளது.இதுகுறித்து அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:"கையால் எழுதப்பட்ட கடவுச் சீட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதிக்கு
முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதன்பின்பு
அவை பயன்பாட்டில் இருக்காது' என்று சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு
தெரிவித்துள்ளது. 24-ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட
கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், புதிதாக விண்ணப்பித்தால்
நிராகரிக்கப்படலாம். மேலும், பயணத்தின்போது வேறுஏதேனும் பிரச்னையை
எதிர்கொள்ளவும் நேரிடலாம்.2001-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும்
கடவுச்சீட்டுகளில் உள்ளவிவரங்கள் கணினி மூலமே அச்சிடப்படுகிறது. சர்வதேச
பயணங்கள் மேற்கொள்ளும்போது இவையே அனுமதிக்கப்படுகிறது.குறிப்பாக,
1990-களின் மத்தியில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள் செல்லுபடியாகும் காலம்
20 ஆண்டுகளாகும். அவற்றின் காலம் இப்போது முடிந்திருக்கும்.
எனவே,
கையால் எழுதப்பட்ட கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர், வரும் 24-ஆம் தேதிக்கு
முன்பாக புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
கூடுதல் விவரங்களைwww.passportindia.gov.in என்ற இணையதளத்திலும்,
1800-258-1800 என்ற இலவச சேவை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.