தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்றைய மத்திய பா.ஜ.க அரசு ரெயில்வே துறையை அதிக லாபம் ஈட்டும் வணிகத்துறையாக மாற்ற பயணிகள் மீது சுமையை ஏற்றுகிறது. சமீபத்தில் பொது பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் ரூபாய் 30-ல் இருந்து ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் 5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணித்தால், பாதிக்கட்டணம் செலுத்தினால் போதும் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது சாதாரண இரண்டாம் வகுப்பை தவிர்த்த பிற வகுப்புகளில் குழந்தைகள் பயணித்தால் முழுக்கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக தற்போது தட்கல் ரெயில் கட்டணத்தை 10 சதவீதம் முதல்
40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இத்தகைய கட்டண உயர்வு மக்கள் விரோதச்
செயலாகும். எனவே மத்திய பா.ஜ.க அரசு அறிவித்த தட்கல் கட்டண உயர்வையும், பிற
கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்திட வேண்டும். இன்றைய மத்திய பா.ஜ.க அரசு ரெயில்வே துறையை அதிக லாபம் ஈட்டும் வணிகத்துறையாக மாற்ற பயணிகள் மீது சுமையை ஏற்றுகிறது. சமீபத்தில் பொது பயணச்சீட்டை ரத்து செய்வதற்கான கட்டணம் ரூபாய் 30-ல் இருந்து ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டது.
மேலும் 5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயணித்தால், பாதிக்கட்டணம் செலுத்தினால் போதும் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்போது சாதாரண இரண்டாம் வகுப்பை தவிர்த்த பிற வகுப்புகளில் குழந்தைகள் பயணித்தால் முழுக்கட்டணமும் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது.